Type Here to Get Search Results !

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 24.12.2025 அன்று நடத்தப்படும் இலவச நேரடி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகள் .....


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும்TNPSC- Group2/2A முதல்நிலை மற்றும் முதன்மை போட்டித் தேர்வுகளுக்கான இலவச நேரடி மற்றும் இணையவழி  பயிற்சி வகுப்புகள் 24.12.2025 அன்று ஈரோடு  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது.


இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் Smart Board, இலவச Wifi வசதி, அனைத்து  போட்டித்தேர்வுகளுக்கான  புத்தகங்கள் அடங்கிய  நூலக வசதி, பொது அறிவுக்கான மாதஇதழ்கள், பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test), வாராந்திர தேர்வுகள், இணையவழித் தேர்வுகள் (online test), முழுமாதிரித்தேர்வுகள், மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி  வசதியுடன்  பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களை https://forms.gle/L18nssPtuQNV8haQ7 என்ற Google Form link-இல் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
சமீபத்தில்   வெளியிடப்பட்ட   கூட்டுறவுத்   துறை    உதவியாளர்    பணிக்காலியிடத்திற்கான தேர்வு முடிவுகளில் இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நடத்தப்பட்ட இலவச இணையவழி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களில் SRB எழுத்துத் தேர்வில் 8 பேரும் DRB எழுத்துத் தேர்வில் 49 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC-Group-II, Group -IV,  TNUSRB, TET ஆகிய பயிற்சி வகுப்புகளில்  பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்த 12 மாணவர்கள் 2024-இல் நடைபெற்ற TNPSC GROUP -IV தேர்வில் தேர்ச்சி பெற்று கிராம நிர்வாக அலுவலர், ஊரக வளர்ச்சித் துறை, வணிகவரித்துறை, குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, கைத்தறித்துறை போன்ற பல்வேறு அரசுத்துறைகளில் பணிநியமனம் பெற்றுள்ளனர். கடந்த TNPSC-Group-II/IIA முதனிலைத் தேர்வில் 25 மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வில் 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற்றுள்ளனர். 2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 7 மாணவர்கள் தேர்ச்சி பெற்று துறை ஒதுக்கீட்டிற்காக காத்திருக்கின்றனர்.                                           
  
 இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம்.







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.