பாரதப் பிரதமரின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்டச்சநல்லூர் பகுதியில் வெகு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குமார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் T.சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் G.நாகராஜன் முன்னிலையில், முன்னாள் சபாநாயகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் வி பி துரைசாமி அவர்கள் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் N.P. சத்தியமூர்த்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஒன்றிய துணைத் தலைவர் ஹரி ராஜ் , அரசு தொடர்பு பிரிவு குப்புசாமி ஆகியோர் நிகழ்ச்சிக்கான நலத்திட்ட உதவிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் முன்னாள் ஒன்றிய தலைவர் என் கணேசன், செல்வகுமார், பழனிசாமி, சௌமியா ஆகியோர் கலந்து கொண்டனர். ரகுபதி விளையாட்டுத்துறை நன்றி உரையாற்றினார்.
இதில் 180 பயனாளிகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை மற்றும் மருந்துகளை பெற்று சென்றனர்.
பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான இலவச காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.
விளையாட்டு துறையை சார்ந்த இருபதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நேரு யுவகேந்திரா விளையாட்டு பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு பதிவு எண் வழங்கப்பட்டது.
பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.
✍️ நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சுந்தரம்.