Type Here to Get Search Results !

அன்புமணி ராமதாஸ் கைது - பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பா.ம.க. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்...

28.07.2023 இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாசை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,  விவசாயிகளுக்கு பாதுகாப்பாக போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாசை கைது செய்த தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் உமாசங்கர் தலைமை வகித்தார்.  மாவட்ட தலைவர் மூர்த்தி,  மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன்,  மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன்,  மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி,  மாவட்ட துணைத்தலைவர் சேகர்,  மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் முருகேசன், பள்ளிபாளையம் நகர துணை செயலாளர் ராஜசேகர்,  நகர துணைத் தலைவர் சரவணன்,  நகர இளைஞரணி செயலாளர் செந்தில்நாதன்,  நகர பொறுப்பாளர் பாஸ்கர்,  நகர துணை தலைவர் மணி,  பகுதி செயலாளர் மணி,  காளிதாஸ்,  இளைஞர் அணி செயலாளர் மூர்த்தி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட, நகர,  ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு  கண்டன கோஷங்களை எழுப்பினர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.