Type Here to Get Search Results !

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் மகளிர் காண மாதந்தோறும் ரூ. 1000 உரிமை தொகை திட்டத்தினை துவங்கி வைத்தார்...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்களால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சித்தலைவன் பிறந்த (காஞ்சிபுரம்) மண்ணில் மகளிர் காண மாதந்தோறும் ரூ. 1000 உரிமை தொகை திட்டத்தினை  துவங்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள்  வேளாளர் மகளிர் கலைக்கல்லூரியில் துவங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர். ப. செல்வராஜ் அவர்கள், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாஜலம் அவர்கள் , ஈரோடு மாநகராட்சியின் மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள், துணை மேயர் V.செல்வராஜ் அவர்கள், ஊராட்சி குழு தலைவர் திருமதி நவமணி கந்தசாமி அவர்கள், துணைத்தலைவர் கஸ்தூரி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் வட்டாட்சியர் அவர்கள், மண்டல குழு தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.