Type Here to Get Search Results !

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது...

ஈரோடு தெற்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின்  ஆணைக்கிணங்க முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைை, மதுவிலக்கு  மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி துவங்கி வைத்தார்.
மேலும் சித்தோடு ராயபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை அமைச்சர் மற்றும் தலைமை ஆசிரியர் இரத்தினசபாபதி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி.செல்வராஜ் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர் வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பெரும் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து  ஈரோடு கிரீன் பவுண்டேஷன் சார்பாக மரம் நடுவிழா நடைபெற்றது. இதில் தலைவர் சேகர், பொருளாளர் ஜெகதீஸ், செயலாளர் ரமேஷ்,  துணைத்தலைவர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.