Type Here to Get Search Results !

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை R A N M கல்லூரியில் அமைச்சர் சு.முத்துசாமி இன்று துவங்கி வைத்து பணிநியமன ஆணையை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு  

ஈரோடு மாவட்ட நிர்வாகம்,  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை,  ஈரோடு ரங்கம்பாளையத்திலுள்ள  R A N M  கல்லூரியில், 

மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் 16.12.2023 இன்று துவங்கி வைத்து பணிநியமன ஆணையை வழங்கினார். 

உடன்,   மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா அவர்கள்,  அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் அவர்கள், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள், துணை மேயர் V.செல்வராஜ் அவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.