Type Here to Get Search Results !

அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் சு.முத்துசாமி மரியாதை...


திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்த காஞ்சி தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக அவரது முழு உருவ சிலைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி  மரியாதை செய்தார். 




இந்நிகழ்ச்சியில், ராஜ்யசபா உறுப்பினரும் கழக துணை பொது செயலாளருமான அந்தியூர் ப.செல்வராஜ் அவர்கள், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ் அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் அவர்கள், 




ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள், துணை மேயர் செல்வராஜ் அவர்கள், ஈரோடு மாநகரக் கழக செயலாளர் மு. சுப்ரமணியம் அவர்கள் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், கழக சார்பு அணியினர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.









Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.