Type Here to Get Search Results !

வடமுகம் வெள்ளோடு, உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை அமைச்சர் பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டம், வடமுகம் வெள்ளோடு ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி  இன்று (08.10.2025) நேரில் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் வகையில் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற சிறப்புத் திட்டத்தை தொடங்கி வைத்து, இச்சிறப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் வடமுகம் வெள்ளோடு ஊராட்சி, கொம்மன்கோவில் பகவதி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இம்முகாமில் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ், மின் இணைப்பு பெயர் மாற்றித்திற்கான சான்றிதழ், குடும்ப அட்டையில் பெயர் திருத்தத்திற்கான சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்படி, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் வடமுகம் வெள்ளோடு ஊராட்சி, கொம்மன்கோவில் பகவதி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு, 1 நபருக்கு பட்டா மாறுதல் விண்ணப்பபடிவத்தினையும், 1 நபருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கான சாதிச்சான்றிதழ்களையும், 1 நபருக்கு பெயர் மாற்றம் செய்வதற்கான ஆணையும், 1 நபருக்கு தொழில் நலவாரிய அட்டையும், 1 நபருக்கு வாரிசு சான்றிதழ்களையும் என மொத்தம் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் மொடக்குறிச்சி, எல்லக்கடை பொன்தாமரைமஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு, 3 நபருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பத்தினையும், 1 நபருக்கு வாரிசு சான்றிதழ்களையும், 1 நபருக்கு சாதிச்சான்றிதழ்களையும், 1 நபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதற்கான ஆணையினையும், பயனாளிகளுக்கு 1 நபருக்கு நலத்திட்ட விதவைச்சான்றிதழ் என மொத்தம் 7 உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், நாளைய தினம் (09.10.2025) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமானது, ஈரோடு மாநகராட்சி மண்டலம்-2 ஈரோடு கார்ப்பரேஷன் திருமண மண்டபத்திலும், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி, பி.மேட்டுப்பாளையம் சமுதாயக்கூடத்திலும், கொடுமுடி வட்டாரம், சிவகிரி கொங்கு மஹாலிலும், பவானிசாகர் வட்டாரம் பனையம்பள்ளி சக்தி மஹாலிலும், பெருந்துறை வட்டாரம் பாண்டியம்பாளையம் வி.எஸ்.எம்.மஹாலிலும், தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரம் சிகேகே மஹாலிலும் என 6 இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறலாம்.

இந்நிகழ்வுகளின்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், உதவி ஆட்சியர்(பயிற்சி) காஞ்சன் சௌத்ரி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் ஜெகநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.