Type Here to Get Search Results !

மிக் ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ்நாடு சிறு, குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை ஆகியோர்  
தமிழகத்தில் மிக் ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அஷ்டலட்சுமி நகரின் பகுதிகளான கொலபாக்கம், வேம்புலியம்மன் தெரு, அம்பேத்கர் நகர் பொதுமக்களுக்கு இன்று  நிவாரண பொருட்களை வழங்கினார்கள். 

உடன் மாவட்ட சேர்மன்,  ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், வரதராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.